ரேபரேலி கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
ரேபரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்ட நீதிமன்ற வாயிலில் 5 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இன்று கண்டெடுக்கப்பட்டதால் பீதி நிலவுகிறது.
கடந்த நவம்பர் 23ம் தேதி லக்னோ, பைசாபாத் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60பேர் படுகாயம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் இந்த சதிகார செயலைத் தொடர்ந்து மத்திய உளவுத்துறை அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தியது. இந்நிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை யொட்டி நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நீதிமன்றத்தின் பிரதான வாயில் அருகே அநாதையாக ஒரு சைக்கிள்
நின்று கொண்டிருந்தது.
அதில் கட்டி வைக்கப்பட்டிருந்த பையை போலீசார் சோதனையிட்டபோது அதில் சக்தி வாய்ந்த 5 வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு செயலிழக்கப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications