போலி என்கெளண்டர் கொலையை நியாப்படுத்திய மோடிக்கு சிக்கல்

டெல்லி: குஜராத்தில் போலி என்கெளண்டரில் சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசிய அம் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசுக்காக வாதாடி வரும் மூத்த வழக்கறிஞரான துள்சி, இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டதோடு மோடியையும் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.
அதே போல மோடி மீது இது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது.
சூரத் நகரில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, சொராபுதீனை சுட்டுக் கொன்றதில் எந்தத் தப்பும் இல்லை. இதற்காக என்னை சோனியா காந்தி தூக்கில் போடப் போகிறாரா.. முடிந்தால் செய்யட்டும் என்றார்.
அப்பாவியான சொராபுதீனை சுட்டுக் கொன்ற குஜராத் போலீஸார் அவரது மனைவியை கற்பழித்து எரித்துக் கொன்றுவிட்டனர்.
இந்த விவகாரத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நிலையில், உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வரும் நிலையில் தான் நரேந்திர மோடி இவ்வாறு பேசியுள்ளார்.
இதையடுத்து மோடிக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
போலி எண்கெளன்டர் நடத்தியதை முதல்வரே ஒப்புக் கொண்டு விட்ட நிலையில் இந்த வழக்கில் குஜராத் அரசுக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் துள்சி, அதிலிருந்து விலகியுள்ளார்.
சட்டத்தையும் நீதியையும் மோடி கேலிக்கூத்தாக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
அதே போல புகார்கள் உறுதியானால் தேர்தல் ஆணையமும் கடும் நடவடிக்கை எடுக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியும் கூறியுள்ளார்.
ஆனால், மோடி பேச்சு குறித்து சூரத் கலெக்டரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், நரேந்திர மோடியின் பேச்சு வெட்கக் கேடானது. ஒரு கிரிமினலின் தலையெழுத்தை சட்டம் தான் நிர்ணயிக்க முடியும். ஒரு மாநில முதல்வரோ, ஏன் பிரதமர் கூட நிர்ணயம் செய்ய முடியாது. போலி என்கவுன்டர் சம்பவத்தை நியாயப்படுத்தி கூறுவது மிகவும் மோசமானது என்றார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நரேந்திர மோடிக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படும் என்றார்.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறுகையில், நரேந்திர மோடியின் பேச்சு குறித்து மீடியாவில் பார்த்தோம். ஆனால், சூரத் மாவட்ட கலெக்டரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிக்கை வரவில்லை. அந்த அறிக்கை வந்த பிறகு தான் நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய முடியும் என்றார்.
சூரத் கலெக்டர் அறிக்கை தருவாரா?
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications