இலங்கை பேருந்தில் கண்ணிவெடித் தாக்குதல்-15 பேர் பலி
கொழும்பு: இலங்கையின் அனுராதபுரா மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 15 பேர் பலியானார்கள். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நேற்று இரவு எட்டே முக்கால் மணியளவில் அனுராதபுரா மாவட்டம் அபிமானபுரா என்ற இடத்தில் ஒரு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்து படாவியா என்ற இடம் நோக்கி போய்க் கொண்டிருந்தது.
அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் பேருந்து சிக்கி வெடித்தது. இதில், 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கொழும்பில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலைத் தொடர்ந்து அனுராதபுரா மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அபிமானபுராவுக்கு அருகே உள்ள கெபிட்டி கொல்லவா என்ற இடத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 64 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications