கலெக்டர் காரை ஜப்தி செய்ய உத்தரவு!

Subscribe to Oneindia Tamil


மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாண்டி, அம்பலம், தன்ராஜ், ராஜேந்திரன், மனோகரன் உள்பட 5 பேருக்கு சொந்தமான 55 சென்ட் நிலம் மதுரை உயர்நீதி மன்ற கிளை அமைக்க அரசின் சார்பில் கையகப் படுத்தப்பட்டது.

அதற்கு விலையாக சென்ட்டுக்கு ரூ.55 கொடுத்தனர். இந்த விலை மிகவும் குறைவாக உள்ளது என்று கூறி கூடுதல் விலை கோரி முதலாவது விரைவு நீதிமன்றத்தில் 5 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஒரு சென்ட்டுக்கு ரூ.7,200 கொடுக்க உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.

இதனால், பாக்கித் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 99 ஆயிரத்து 699 ஆக உயர்ந்தது. இந்த தொகையை வழங்காததால் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தனர்.

இம் மனுவை விசாரித்த நீதிம்ன்றம், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய் அலுவலர் ஆகியோர் பயன்படுத்தும் 2 அம்பாசிடர் கார்கள், முக்கியப் பிரமுகர்களின் பயன்பாட்டுக்கான 3 கார்கள், 10 மின்
விசிறிகள், 10 சேர்கள், 10 பீரோக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டனர்.

இதன்படி நேற்று நீதிமன்ற அமீனா தம்பித்துரை மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தார். அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய உயர் அதிகாரிகள் 15 நாட்களுக்குள் உரிய நஷ்ட ஈடு தொகையை
செலுத்தி விடுவாக கூறியதையடுத்து அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த சம்வத்தால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+