ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை மிரட்டிய கும்பல் கைது
சென்னை: ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை மிரட்டிய ரவுடிக் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் காரில் தனது குழந்தையை பள்ளியில் விட்டு திரும்பும் போது காந்தி மண்டபம் அருகில் 4 பேர் காரை வழிமறித்து காரில் ஏறியுள்ளனர். அவர்கள் 4 பேரும் சுரேஷை கத்தியை காட்டி மிரட்டி, திரிசூலம் அடிவாரத்திற்கு காரை ஓட்டிச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
திரிசூலம் மலையடிவாரத்திற்குள் சென்றவுடன், உனக்கு நம்பிக்கையான ஆளை ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து வரச்சொல். இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.
இதனால் பயந்த சுரேஷ், பெட்ரோல் பங்குக்கு போன் செய்து ரூ.1 லட்சம் கொண்டு வரச் சொல்லி கொடுத்த பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளார். இது தொடர்பாக போலீசிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் சுரேஷ் போலீசில் புகார் கொடுக்காமல் இருந்துள்ளார். ஆனால் ரவுடிக் கும்பல் மீண்டும் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இைதயடுத்து சுரேஷ் போலீசில் புகார் செய்தார்.
கமிஷ்னர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைச்ச போலீசார் அதிரடி வேட்டை நடத்தி சுரேஷை மிரட்டிய ராக்கப்பன்(30), வெங்கடேசன்(30), கார்த்திக்(20) ஆகியோரை கைது செய்தனர். தாஸ் என்பவன் தலைமறைவாகிவிட்டான்.
இந்த 3 பேரும் மையிலாப்பூர் பகுதியில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.
இவர்களுக்கு தலைவனாக செயல்பட்ட ராக்கப்பன் ஒரு கொள்ளை வழக்கில் 7 வருடங்கள் சிறை தண்டனை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications