For Daily Alerts
Just In
அல் கொய்தா தாக்குதல் அபாயம்: வளைகுடா நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை
துபாய்: வளைகுடா நாடுகளில் அல் கொய்தா அமைப்பினர் பெரும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா எச்சரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பஹ்ரைன் சென்றுள்ளார். அங்கு நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அவர் பேசுகையில், வளைகுடா நாடுகளில் பெரும் தாக்குதலை நடத்த அல் கொய்தா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய உளவுப் பிரிவுக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. வளைகுடா நாடுகளின் மிக முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அல் கொய்தா அமைப்பு குறி வைத்துள்ளது.
அல் கொய்தா அமைப்புக்கு சமீபத்தில் 14 நாடுகளிலிருந்து புதிதாக தீவிரவாதிகள் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், அல் கொய்தாவின் பயிற்சிப் பள்ளிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார் நாராயணன்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 17:39 [IST]