நெல்லை மாநாடு-பேரணியை முதல்வர் பார்வையிட திருவாரூர் தேர் வடிவ மேடை
நெல்லை: நெல்லையில் நடைபெறவிருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டு பேரணியை முதல்வர் கருணாநிதி பார்வையிட திருவாரூர் தேர் வடிவில் பிரத்தியேக மேடை அமைக்கப்படுகிறது.
நெல்லையில் வரும் 15,16 ஆகிய தேதிகளில் திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக கடந்த 2 மாதங்களாக இரவு, பகலாக பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விழாத் தலைவர்கள் அமரும் மேடை முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
மேடைக்கு அருகிலேயே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஓய்வெடுக்க தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு பந்தலின் வெளியே கோட்டைச் சுவர் போல உள்ள அலங்காரம் பிரம்மிக்க வைக்கிறது.
இந்த மாநாட்டை தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடக்கிறது. இவர்கள் அனைவரும் வெள்ளை சீருடை அணிந்து செல்வது தான் பேரணியின் சிறப்பாகும்.
வ.உ.சி மைதானத்திலிருந்து துவங்கும் இந்த பேரணி பாளை பேருந்து நிலையம், பெரியார் சிலை, ஐகிரவுண்ட் ரோடு வழியாக சென்று மகாராஜநகர் ரவுண்டானாவை அடைகிறது.
இந்த பேரணியை முதல்வர் பார்வையிடுவதற்காக அவருக்காக பிரத்தியேகமாக திருவாரூர் தேர் வடிவில் தனி மேடை தயாராகி வருகிறது.
சிறப்பு விரைவுப் படை வந்தது:
திமுக இளைஞரணி மாநாட்டு பாதுகாப்புக்காக கோவையில் இருந்து சிறப்பு விரைவு படையினர் நெல்லை வந்துள்ளனர். தமிழக டி.ஐ.ஜி ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி விஜயகுமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மாநாட்டு பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல்கட்டமாக கோவையில் இருந்து வந்த சிறப்பு விரைவு படை போலீசார் மாநாட்டு பந்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மாநாட்டு பந்தலை பார்க்க குவிந்த மக்கள்:
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலைக் காண நெல்லை மாநகர மக்களும், சுற்றியுள்ள கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து போன வண்ணம் உள்ளனர்.
மாநாட்டு பந்தலுக்குள் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வேலைப்பாடும் கலைநயத்துடன் உள்ளன.
-
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'











Click it and Unblock the Notifications