இலங்கைக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற மில் அதிபர் கைது
தூத்துக்குடி: இலங்கைக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற மில் அதிபரை உணவு பொருள் கடத்த தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மீன்வள கல்லூரி அருகே கடந்த மாதம் 14ம் தேதியன்று தனியாருக்கு சொந்தமான கிட்டங்கிக்கு வந்த 4 லாரிகளை குடிமைப் பொருள் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 2,500 மூட்டை ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதில் தொடர்புடைய நபர்கள் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். பின்னர் இந்த வழக்கை சுங்க இலாகாவினர் விசாரித்ததில், ரேசன் அரிசியை 50 கிலோ எடை கொண்ட பைகளில் நிரப்பி பீகாக் பிராண்ட் என்ற பெயரில் இலங்கைக்கும், அதன் பின்னர் அங்கிருந்து பங்காளதேசுக்கும் கடத்தப்படவிருந்தது தெரியவந்தது.
இவ்வழக்கினை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து இது தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த மில் உரிமையாளர் பாலகோபால் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேர் நீதிமன்றத்தில் சரணைடந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications