'மீடியா'க்களின் ஜாதி வெறி- அன்புமணி பாய்ச்சல்

டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் தொடர்பான விவகாரத்தில் என்னைப் பற்றி டெல்லியிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள், டிவி நிறுவனங்கள் தாறுமாறாக, தங்களது இஷ்டத்திற்கு செய்திகளை வெளியிடுகின்றன.
இதற்கு முக்கிய காரணம், நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதுதான். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் செய்தி வெளியிடலாம் என அவர்கள் நினைத்து விட்டனர். ஆனால் இவர்களின் இந்த பாரபட்ச செய்தியால் எனக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது.
திமுக மீது அதிருப்தி:
எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான கட்டாய ஊரக சேவைத் திட்டத்திற்கு திமுகவிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்காதது வருத்தம் தருவதாக உள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, ஹவுஸ் சர்ஜன் படிப்பை முடித்த பிறகுதான் மாணவர்கள் கிராமப்புற சேவைக்கு அனுப்பப்படுவார்கள். இதன் மூலம் சிறந்த டாக்டர்களாக பணியாற்ற அவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.
மேலும் மூத்த டாக்டர்களுக்குக் கீழ்தான் அவர்கள் பணியாற்றப் போகிறார்கள். ஊரகப் பகுதிகளில் நிலவும் டாக்டர்கள் பற்றாக்குறையைப் போக்கத்தான் இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சாம்பசிவ ராவ் கமிட்டி தனது அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றார் அன்புமணி.












Click it and Unblock the Notifications