மசூதியில் சானியா ஷூட்டிங்- கோபத்தில் முஸ்லீம்கள்
ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.
இந் நிலையில் நேற்று இந்த மசூதியில் சானியா மிர்ஸா நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது. இது சிறுபான்மையினர் நலத் துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இந்தத் துறையின் அனுமதியைப் பெறாமல் மெக்கா மசூதியில் ஷூட்டிங் எதையும் நடத்தக் கூடாது.
மேலும் முஸ்லீம் கட்சியான மஜ்லிஸ் இ இத்தாஹதுல் முஸ்லீமின் கட்சியும் மெக்கா மசூதியில் சானியா நடித்த விளம்பரப் படத்தை எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்சியின் எம்.எல்.ஏக்கள்தான் சமீபத்தில் தஸ்லிமா நஸ்ரின் ஹைதராபாத் வந்தபோது அவரை அடிக்கப் பாய்ந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
சானியாவின் ஷூட்டிங்கை நடத்துவதற்கு இந்தக் கட்சியும், உள்ளூர் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் ஷூட்டிங்கை நடத்தி முடித்தனர் விளம்பரப் பட நிறுவனத்தினர்.
இருப்பினும் சிறுபான்மையினர் நலத்துறையின் அனுமதியை வாங்காமல் ஷூட்டிங்கை நடத்தியதால் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
ஷூட்டிங் நடந்தபோது அதை எதிர்த்து அப்பகுதி முஸ்லீம்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.
இந்த ஷூட்டிங் குறித்து மசூதி ஊழியர்கள் சிலரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். விளம்பரப் பட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஷூக்கள் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்ததாகவும், மசூதி காவலாளியை தள்ளி விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் அனுமதி பெறாமல் ஷூட்டிங் நடத்தியது குறித்து விளக்கம் அளிக்குமாறு மசூதியின் மேலாளர் மற்றும் கண்காணிப்பாளருக்கு ஹைதராபாத் மாவட்ட சிறுபான்மை நல அதிகாரி ஷேக் கரீமுல்லா கடிதம் அனுப்பியுள்ளார்.
மசூதி கண்காணிப்பாளர் காஜா நயீமுதீன் கூறுகையில், ஷூட்டிங் தொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. ஷூட்டிங் ஆரம்பித்து 2 மணி நேரம் கழித்துத்தான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஆனால் அதற்குள் ஷூட்டிங்கை நடத்தி முடித்து விட்டனர்.
மசூதி வளாகத்திற்குள் எந்தவிதமான படப்பிடிப்புக்கும் அனுமதி கிடையாது. அப்படி இருக்கையில் விளம்பரப் பட ஷூட்டிங்கை நடத்தியது தவறானது என்றார்.
ஹைதராபாத் நகரின் மையத்தில் இந்த மசூதி அமைந்துள்ளது. வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாது முக்கிய சுற்றுலாத் தலமாகவும் இது விளங்குகிறது. கடந்த மே 18ம் தேதி இங்கு குண்டுவெடிப்பு நடந்து 9 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இங்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!













Click it and Unblock the Notifications