அமெரிக்க பொருளாதார தேக்கம்-இந்திய ஐடி துறைக்கு பாதிப்பில்லை
பெங்களூர்: அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கத்தால் இந்திய சாப்ட்வேர் துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் நடக்கும் சாப்ட்வேரில் பெண்கள் தலைமை குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சில் பேசிய நாஸ்காம் தலைவர் கிரண் கார்னிக்,
2010ம் ஆண்டில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது ஏற்றுமதி இலக்கான 60 பில்லியன் டாலர்களை எட்டிவிடும். அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கத்தால் இந்திய ஐடி துறைக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.
இது குறித்து பல விதமான கருத்துக்கள் பரவி வருகின்றன. சிலர் அமெரிக்க தேக்கம் இந்தியாவுக்கு நல்லது என்கிறது சிலர் நம்மையும் அது பாதிக்கும் என்கின்றனர். நாங்கள் அமெரிக்க சந்தையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
அதே நேரத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவது கவலை தரக் கூடியது தான். இந்த விஷயத்தில் மத்திய அரசு எதையாவது செய்தாக வேண்டும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூபாயின் மதிப்பு அவ்வளவு வேகமாக அதிகரிக்கவில்லை.
பல நாடுகள் ஐடி துறைக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன. இதை இந்தியாவும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.