மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து எம்.பி.பிரகாஷ் விலகல்
பெங்களூர்: தேவே கெளடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி ஒரு வழியாக உடைந்தது. அதிருப்தி தலைவரான முன்னாள் அமைச்சர் எம்.பி.பிரகாஷ் தலைமையில் 13 முன்னாள் எம்.எல்.ஏக்களும், 2 எம்.எல்.சிக்களும் கட்சியை விட்டு நேற்று விலகினர்.
பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க தேவே கெளடாவும், அவரது மகனான முன்னாள் முதல்வர் குமாரசாமியும் மறுத்தது முதலே மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் பூசல் வெடிக்க ஆரம்பித்தது.
மூத்த தலைவரான எம்.பி.பிரகாஷ் உள்ளிட்ட சிலர், வாக்களித்தபடி பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர் ஆனால் அதை கெளடாவும், குமாரசாமியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பிரகாஷ் விரக்தியில் இருந்தார்.
இடையில் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் பதவியில் அமரவும் அவர் திட்டமிட்டார். இதை அறிந்த கெளடா, தடாலடியாக பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்து பிரகாஷை வாரி விட்டார்.
அதன்படி பாஜகவும் ஆட்சி அமைத்தது. ஆனால் ஒரே வாரத்தில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து விட்டார் கெளடா.
இதையடுத்து சமீபத்தில் கர்நாடகத்தில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, சட்டசபையும் கலைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் பிரகாஷ் தலைமையில் அதிருப்தியாளர்கள் ஒன்று திரண்டு நேற்று கட்சியை விட்டு விலகி விட்டனர். பிரகாஷ் தலைமையில் நேற்று கூடிய 13 முன்னாள் எம்.எல்.ஏக்கள் கெளடாவும், குமாரசாமியும் சர்வாதிகார மணப்பான்மையுடன் செயல்படுவதாகவும், ஒருதலைபட்சமாக முடிவுகள் எடுப்பதாகவும் குற்றம் சாட்டி, கட்சியிலிருந்து ராஜினாமா செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.
பின்னர் கட்சியிலிருந்து விலகும் முடிவை பிரகாஷ் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அவர் கூறுகையில், சட்டசபை மதச்சார்பற்ற ஜனதாதள தலைவராக இருந்த குமாரசாமிக்கு எங்களுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளோம்.
அடுத்த கட்ட நடவடிக்ைக குறித்தும், வேறு எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்தும் முடிவு செய்ய 3 அல்லது 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும்.
எங்களுக்கு மேலும் 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்றார் அவர்.
மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து விலகியுள்ள பிரகாஷும், அவரது ஆதரவாளர்களும் கண்டிப்பாக புதிய கட்சியைத் தொடங்க மாட்டார்கள், காங்கிரஸ் அல்லது பாஜகவில் இணைவார்கள் என்று பிரகாஷுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications