மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து எம்.பி.பிரகாஷ் விலகல்
பெங்களூர்: தேவே கெளடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி ஒரு வழியாக உடைந்தது. அதிருப்தி தலைவரான முன்னாள் அமைச்சர் எம்.பி.பிரகாஷ் தலைமையில் 13 முன்னாள் எம்.எல்.ஏக்களும், 2 எம்.எல்.சிக்களும் கட்சியை விட்டு நேற்று விலகினர்.
பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க தேவே கெளடாவும், அவரது மகனான முன்னாள் முதல்வர் குமாரசாமியும் மறுத்தது முதலே மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் பூசல் வெடிக்க ஆரம்பித்தது.
மூத்த தலைவரான எம்.பி.பிரகாஷ் உள்ளிட்ட சிலர், வாக்களித்தபடி பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர் ஆனால் அதை கெளடாவும், குமாரசாமியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பிரகாஷ் விரக்தியில் இருந்தார்.
இடையில் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் பதவியில் அமரவும் அவர் திட்டமிட்டார். இதை அறிந்த கெளடா, தடாலடியாக பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்து பிரகாஷை வாரி விட்டார்.
அதன்படி பாஜகவும் ஆட்சி அமைத்தது. ஆனால் ஒரே வாரத்தில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து விட்டார் கெளடா.
இதையடுத்து சமீபத்தில் கர்நாடகத்தில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, சட்டசபையும் கலைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் பிரகாஷ் தலைமையில் அதிருப்தியாளர்கள் ஒன்று திரண்டு நேற்று கட்சியை விட்டு விலகி விட்டனர். பிரகாஷ் தலைமையில் நேற்று கூடிய 13 முன்னாள் எம்.எல்.ஏக்கள் கெளடாவும், குமாரசாமியும் சர்வாதிகார மணப்பான்மையுடன் செயல்படுவதாகவும், ஒருதலைபட்சமாக முடிவுகள் எடுப்பதாகவும் குற்றம் சாட்டி, கட்சியிலிருந்து ராஜினாமா செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.
பின்னர் கட்சியிலிருந்து விலகும் முடிவை பிரகாஷ் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அவர் கூறுகையில், சட்டசபை மதச்சார்பற்ற ஜனதாதள தலைவராக இருந்த குமாரசாமிக்கு எங்களுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளோம்.
அடுத்த கட்ட நடவடிக்ைக குறித்தும், வேறு எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்தும் முடிவு செய்ய 3 அல்லது 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும்.
எங்களுக்கு மேலும் 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்றார் அவர்.
மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து விலகியுள்ள பிரகாஷும், அவரது ஆதரவாளர்களும் கண்டிப்பாக புதிய கட்சியைத் தொடங்க மாட்டார்கள், காங்கிரஸ் அல்லது பாஜகவில் இணைவார்கள் என்று பிரகாஷுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications