துபாயில் 'நீங்களும் சாதிக்கலாம்' - சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் 'நீங்களும் சாதிக்கலாம்' எனும் சுய முன்னேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை (14.12.2007) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கம் அருகாமையில் உள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு நம்ம ஊரு செய்தி இதழ் ஆசிரியர் முனைவர் அய்யூப் தலைமை தாங்குகிறார். உலக தமிழ் பண்பாடுக் கழக நிர்வாகி முனைவர் ரபியுத்தீன் முன்னிலை வகிக்கிறார்.
நீங்களும் சாதிக்கலாம்' எனும் சுயமுன்னேற்றப் பயிற்சியினை தமிழகத்தைச் சேர்ந்த மனித வள மேம்பாட்டுப் பேராசிரியர் சந்திரசேகரன் வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் தேரிழந்தூர் தாஜுதீன் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீடூர் ஆன்லைன்.காம் நிர்வாகி அஷ்ரப் அலி, நம்ம ஊரு செய்தியின் சார்பில் இஹ்ஸான் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம். நிகழ்ச்சி குறித்த விபரமறிய 050 2864252 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications