170 தமிழக மீனவர்களை சிறை பிடித்த ஆந்திர கடலோர காவல் படை

சென்னை காசிமேடு துறைமுகத்தை சேர்ந்த 170 மீனவர்கள் 26 விசை படகுகளில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
ஆந்திர கடல் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். வழக்கமாக 10 நாட்கள் தங்கியிருந்து மீன் பிடிப்பார்கள். ஆனால் வங்கக் கடலில் திடீரென்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் கடலின் சீற்றம் அதிகமானது. அதனால் அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆந்திர எல்லைக்குள் நுழைந்து காக்கி நாடா மீன்பிடி துறைமுகத்தை நோக்கி சென்றனர்.
ஆனால் அங்கிருந்த ஆந்திர மீனவர்கள், தமிழக மீனவர்கள் நுழைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த ஆந்திர கடலோர காவல்படை போலீசார் ஆந்திர எல்லைக்குள் வந்த தமிழக மீனவர்கள் சுற்றி வளைத்து கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் காசிமேடு பகுதிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீனவர் சங்கத் தலைவர் ரகுபதி தலைமையில் மீனவர்கள் அனைவரும் மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநில மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, ஆந்திர அரசின் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் பேசி மீனவர்களை பத்திரமாக அனுப்பக் கேட்டுக் கொண்டார்.
அவரது உத்தரவையடுத்து தமிழக மீன்வளத்துறை உதவி இயக்குனர் நகருல்லா தலைமையில் காசிமேடு மீனவர் சங்கத் தலைவர் உட்பட 12 பேர் கொண்ட குழு மீன்வர்கள் பத்திரமாக மீட்க ஆந்திரா விரைந்துள்ளது
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications