அனுமதி பெறாத கட்டடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil


டெல்லி: சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டங்களை இடிக்க சென்னை உயர் நீதிமனறம் உத்தரவிட்டது. ஆனால் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க ஒரு வருடத்திற்குத் தடை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.

ஆனால் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் செல்லாது என அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அடுத்த உத்தரவு வரும் வரை அனுமதி பெறாமல் கட்டிய கட்டடங்களை அங்கீகரிக்கக் கூடாது என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்ததுடன், வழக்கு விசாரணையை வரும் 2008ம்
ஆண்டும் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+