ஆக்கிரமிப்பு நிலங்களை பிரித்து ஏழைகளுக்குத் தர வேண்டும் : சரத்குமார்

சென்னை: தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ள நிலங்களை மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, மின்சார தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களும் இதனால் வேலை இழந்து கஷ்டப்படுகிறார்கள்.
இவற்றையெல்லாம் விட்டு விட்டு மின் நிலையங்கள் அமைப்பதில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறவினருக்கு பங்கு இருப்பதாக கூட்டணி கட்சியான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியதும், விளைநிலங்களை ஆக்கிரமித்து ராமதாஸ் கல்வி நிலையங்களை கட்டி வருகிறார் என்று ஆற்காடு வீராசாமி ஆதாரங்களை அள்ளி வீசுகிறார்.
எங்கள் பின்னணியை கிளறினால் உங்கள் தவறுகளை முன்னணிக்கு கொண்டு வருவோம் என்பது போல அமைச்சர் ஆவேச அறிக்கை தருகிறார்.
வன்னியர் கல்வி அறக்கட்டளை, விளை நிலங்களை பயன்படுத்தியிருந்தாலும், அது பிற்பட்ட சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக பயன்படுகிறது. ஆனால் பல தனியார் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் என்ற பெயரால் அரசு நிலங்களை ஆக்கிரமித்து இருந்தால், அவற்றை மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு பட்டாவுடன் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
-
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை












Click it and Unblock the Notifications