அஜீத் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு

அஜீத் நடித்துள்ள பிரமாண்டப் படமான பில்லா வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந் நிலையில், படம் வெளியான சில நாட்களில் அஜீத் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் இந்த ரெய்டு நடந்துள்ளது. இந்த சோதனையின்போது ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பதை வருமான வரித்துறையினர் தெரிவிக்கவில்லை. ரெய்டைத் தொடர்ந்து நடிகர் அஜீத், கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில்தான் கடந்த 2 நாட்களாக தங்கியுள்ளாராம்.
இது வழக்கமான ரெய்டுதான் என்று வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது இதுபோன்ற ரெய்டு நடத்தப்படுவது வழக்கம் என்றும் வருமான வரித்துறையினர் கூறுகின்றனர்.
தொடர்ந்து 15 வருடங்களாக முறையாக வரி கட்டுபவர் என்ற பெயர் பெற்ற ரஜினிகாந்த்தின் வீட்டிலேயே, சந்திரமுகி படத்திற்குப் பிறகு ரெய்டு நடந்தது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் கூட வருமான வரித்துறையினரின் விசாரிப்புகள் இடம் பெற்றன. அதேபோல விஜய்யின் போக்கிரி வந்த பின்னர் அவரும் ரெய்டை சந்தித்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications