பாமகவின் முயற்சி தவறானது-அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கிராமப்புறத்தில் டாக்டர்கள் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கும் பாமகவின் முயற்சி தவறானது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது,

கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீதமுள்ள காலிப் பணியிடங்கள் ஓரிரு வாரங்களில் நிரப்பப்படும்.

இந்தியாவில் மருத்துவத் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். எனவே கிராமப்புறத்தில் டாக்டர்கள் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சி தவறானது. இதற்காக பாமக போராடுவது சரியல்ல.

அரசு மருத்துவமனை டாக்டர், செவிலியர் உள்ளிட்ட அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும். அதன்மூலம் அரசு மருத்துவமனைகளில் நடமாடும் புரோக்கர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சித்த மருத்துவமனை வாரத்தில் 7 நாட்களும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+