மாயாவதிக்கு லஷ்கர்-எ-தொய்பா தீவிரவாதிகள் குறி?
லக்னெள: உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதிக்கு லஷ்கர்-எ-தொய்பா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வந்துள்ளதால் போலீசார் அவருக்கு கடும் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 15 மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உளவுப்பிரிவு போலீசார் பல இடங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் உளவுத்துறை போலீசார் தொலைபேசி உரையாடல்களை கண்காணித்ததில் உத்தரப்பிரேதசத்தில் முக்கியமான ஒருவரை கொல்வதற்கு நேபாளம் அல்லது பாகிஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக தெரிய வந்தது.
2 பேர் கொண்ட தற்கொலைப் படை தாக்குதல் தீவிரவாதிகளான அவர்கள் நேபாள் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும், அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் உயர் பதவியில் உள்ள ஒரு அரசியல்வாதியின் மீது தற்கொலைப் படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அவர்களின் குறி அனேகமாக உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியாகத் தான் இருக்கும் என உளவுத்துறை சந்தேகிக்கிறது. தொலைபேசி உரையாடல், நேபாளில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு பேசப்பட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் மாயாவதிக்கு தற்போது பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை கடத்துவதற்காக வந்த 3 தீவிரவாதிகளை போலீசார் உத்தரப் பிரதேசத்தில் தான் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications