மாயாவதிக்கு லஷ்கர்-எ-தொய்பா தீவிரவாதிகள் குறி?

Subscribe to Oneindia Tamil


லக்னெள: உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதிக்கு லஷ்கர்-எ-தொய்பா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வந்துள்ளதால் போலீசார் அவருக்கு கடும் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 15 மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உளவுப்பிரிவு போலீசார் பல இடங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் உளவுத்துறை போலீசார் தொலைபேசி உரையாடல்களை கண்காணித்ததில் உத்தரப்பிரேதசத்தில் முக்கியமான ஒருவரை கொல்வதற்கு நேபாளம் அல்லது பாகிஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக தெரிய வந்தது.

2 பேர் கொண்ட தற்கொலைப் படை தாக்குதல் தீவிரவாதிகளான அவர்கள் நேபாள் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும், அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் உயர் பதவியில் உள்ள ஒரு அரசியல்வாதியின் மீது தற்கொலைப் படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர்களின் குறி அனேகமாக உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியாகத் தான் இருக்கும் என உளவுத்துறை சந்தேகிக்கிறது. தொலைபேசி உரையாடல், நேபாளில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு பேசப்பட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் மாயாவதிக்கு தற்போது பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை கடத்துவதற்காக வந்த 3 தீவிரவாதிகளை போலீசார் உத்தரப் பிரதேசத்தில் தான் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+