சபரிமலை பிரசாத லாரிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள் சஸ்பெண்ட்
நெல்லை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அரவணை பிரசாத டின்கள் ஏற்றிச் சென்ற லாரி வாட் செலுத்தாமல் வந்ததால் அபராதம் வசூலித்த 2 வணிக வரித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ராஜபாளையத்தில் இருந்து அரவணை டின்களை ஏற்றிக் கொண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தென்காசி-புளியரை வழியாக சென்ற லாரியை ஆரியங்காவு சோதனை சாவடியில் கேரள வணிக வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மதிப்பு கூட்டு வரி (வாட்) செலுத்த வேண்டும் என்று கூறி ரூ.10,000 அபராதம் வசூலித்தனர்.
சபரிமலைக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை உடனடியாக அனுப்பும்படியும், சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு போதிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் லாரிகளை அனுப்பிய பின்னர் அபராதம் வசூலித்துக் கொள்ளலாம் என சோதனைச் சாவடி வணிக வரித்துறை அதிகாரிகளை கேரள அரசு அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், அரசு அறிவுரையை மீறி லாரிக்கு அபராதம் விதித்த அதிகாரி ஆன்ட்ரூஸ், இன்ஸ்பெக்டர் சுனில்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications