பாகிஸ்தானில் ரயில் விபத்து: 58 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் இன்று காலையில் ரயில் கவிழ்ந்ததில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்னர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி சென்ற கராச்சி எக்ஸ்பிரஸ் மெஹ்ராபூர் அருகே வரும் போது இன்று காலையில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 58 பயணிகள் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் கேஸ் கட்டர்களின் உதவியுடன் ஜன்னல் கம்பிகளை அறுத்து அவர்களின் உடல்களை மீட்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ப்டடு வருகின்றனர்.
16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 12 பெட்டிகள் கவிழ்ந்து விட்டனர். இதில் 4 பெட்டிகள் பயங்கர சேதமடைந்துள்ளது. இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications