For Daily Alerts
Just In
கோவை குண்டுவெடிப்பு கைதிகளுக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 16 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 16 பேருக்கு தலா 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு மிகவும் அசாதாரணமானது. பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் பெற உரிமை இல்லை என்று ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Story first published: Friday, December 21, 2007, 14:14 [IST]