16 மலேசியத் தமிழர்கள் மொட்டை போட்டு நூதன போராட்டம்
சிங்கப்பூர்: இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழுவின் (ஹிண்ட்ராப்) நிர்வாகிகள் மீது எந்தவித விசாரணையும் இல்லாமல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததற்குக் கண்டனம் தெரிவித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 16 தமிழர்கள் மலேசிய முருகன் கோவிலில் மொட்டை அடித்துப் போராட்டம் நடத்தினர்.
ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மலேசிய அரசு நடவடிக் எடுத்து ஐவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கோலாலம்பூர் பேரணி தொடர்பாக கைது செய்யப்பட்ட 31 தமிழர்கள் மீதான கொலை முயற்சிகளை கைவிட்டு விட்ட மலேசிய அரசு, ஹிண்ட்ராப் அமைப்பினர் ஐவர் மீதான வழக்குகளை இன்னும் வாபஸ் பெறவில்லை.
இந்த நிலையில் ஹிண்ட்ராப் அமைப்பினரை விசாரணையே இல்லாமல் சிறையில் அடைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 தமிழர்கள் மலேசியாவில் மொட்டை அடித்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
மலேசியாவில் உள்ள நூற்றாண்டு கால பழமை வாய்ந்து பட்டு குகை முருகன் கோவிலில் இந்த நூதனப் போராட்டம் நடந்தது.
ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, பட்டு குகை கோவில் பகுதியில் அமைதியான முறையில் கூடி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். அந்தப் பதாகைகளில் ஹிண்ட்ராப் அமைதிப் போராட்டம் என்ற வாசகம் தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம் பெற்றிருந்தது.
பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி முருகன் சன்னதியில் சிறப்புப் பூஜைகள் செய்தனர். மேலும், 16 பேர் மொட்டை போட்டுக் கொண்டு நூதனப் போராட்டத்தையும் நடத்தினர்.
இதற்கிடையே, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் ஜோஹார் மாகாண தலைவர் கே.எஸ். பாலகிருஷ்ணன், ஹிண்ட்ராப் அமைப்பினர் கூறுவது போல மலேசியத் தமிழர்கள் ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஜோஹார் மாகாணத்தில், தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கடந்த ஆண்டுகளில் 90 லட்சம் மலேசியன் டாலர் பணம் செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் புதிய தமிழ் பள்ளிகளைக் கட்டுவதற்காக 20 லட்சம் மலேசிய டாலர் பணத்தை மாகாண அரசு ஒதுக்கியது என்றார் அவர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications