வெள்ளப் பகுதிகளில் கருணாநிதி ஆய்வு
சென்னை: சென்னை அருகே வெள்ளத்தால் உடைந்த காரனோடை பாலத்தை முதல்வர் கருணாநிதி இன்று பார்வையிட்டார். மேலும் மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்களையும் அவர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
சமீபத்தில் பெய்த கன மழையால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்துள்ளன. 52 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு ெபரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரனோடை பாலம் சமீபத்திய வெள்ளத்தால் உடைந்தது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை இன்று காலை முதல்வர் கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேத விவரம் குறித்தும், போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பழவேற்காடு, மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மழையால் பாதிக்கப்பட்ட வயல்களைப் பார்வையிட்டார். பிறகு விவசாயிகளிடம் சேத விவரம் குறித்து கேட்டறிந்தார். உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications