எஸ்.ஐ.யை அரிவாளால் வெட்டிய ரவுடிக்கு வலைவீச்சு
தஞ்சாவூர்: சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பிய ரவுடியை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் மகாதேவன்.
இவரிடம், ராவுசாப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் மேரி என்கிற பெண் இளையராஜா என்பவர் மீது புகார் கொடுத்தார். அதுகுறித்து விசாரிக்க மகாதேவன், ஏட்டுடன் பைக்கில் ராவுசாப்பட்டிக்குச் சென்றார்.
அப்போது வழியில் சங்கர் என்ற ரவுடி வந்தார். இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளி வந்தவர் ஆவார். ஆனால் கோர்ட்டுக்கு மீண்டும் வராமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சங்கரைப் பார்த்த மகாதேவன், வண்டியை நிறுத்தி அவரை அழைத்தார். அப்போது மகாதேவனிடம் நெருங்கி வந்த சங்கர், என்னை அவமானப்படுத்தி விட்டாயே என்று கோபமாக கூறியபடி, மகாதேவனை அரிவாளால் வெட்டினார்.
இதில் மகாதேவனுக்கு இடுப்பில் பலமாக வெட்டுப்பட்டது. பின்னர் சங்கர் ஓடி விட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன ஏட்டு, மகாதேவனை தனியார் மருத்துவமனையில் கூட்டி வந்து சேர்த்தார்.
சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற ரவுடியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications