Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'செண்பகம் வைர வாஞ்சிநாக் குன்றக்கோதை வலவமாற வழுதி'!!!!!

Subscribe to Oneindia Tamil


சென்னை: உலக அமைதிக்காக சென்னையைச் சேர்ந்த 3 பேர் மலேசியாவில் சைக்கிளில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்தவர் செண்பகம் வைர வாஞ்சிநாக் குன்றக்கோதை வலவமாற வழுதி (அவருடைய பெயரே தான்). இவர் டெல்லியில் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு உலகை சைக்கிளால் சுற்றி வரவேண்டும் என்று நீண்ட நாள் கனவாக இருந்ததாம். இவருடைய முயற்சிக்கு தமிழக அரசும், அவர் பணிபுரியும் பள்ளி நிர்வாகமும் உதவ முன்வந்தன. இதைத் தொடர்ந்து கிழக்கு ஆசிய நாடுகளில் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து செண்பகம் மற்றும் அவரது உறவினர்களான ராஜேஷ்குமார், சுரேந்திரன் ஆகிய 3 பேரும் உலக அமைதிக்காக சைக்கிளில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக செண்பகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த 17 வருடங்களாக நான் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். நான் இதுவரை 9 லட்சத்து 86 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் மூலம் பயணம் செய்துள்ளேன். இதற்கு முன்னர் 6 லட்சத்து 43 ஆயிரம் கிலோ மீட்டம் பயணம் மேற்கொண்டதே கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் இந்தச் சாதனையை பல ஆண்டுகளுக்கு முன்னர் முறியடித்து விட்டேன்.

இதுவரை என்னுடைய சாதனையை கின்னஸ் சாதனையாக அறிவிப்பு செய்யப்படவில்லை. கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்ட பின்னரே, என் சாதனையை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்வேன். கோலாலம்பூரில் இருந்து தாய்லாந்து வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இந்த பயணத்தை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்வதே என் கனவு என்றார் செண்பகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+