நெற்றியில் கண்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை
நெல்லை: நெல்லை அருகே நெற்றியில் கண்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது.
நெல்லை, பேட்டை ரயில்வே கேட் அருகேயுள்ள நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் மனோகரன் (23), வள்ளி (20). கர்ப்பிணியான வள்ளிக்கு 2 தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு மூக்கு இல்லை. மேலும் 2 கண்களும் நெற்றியில் உள்ளது. தலைக்கு வெளிப்பகுதியில் மூளை உள்ளது.
குழந்தை பிறந்ததும், மனோகரன் தனது மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். நெற்றியில் கண்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகிறார்கள்.
இந்தக் குழந்தை குறித்து அரசு மருத்துவனை டாக்டர்கள் கூறுகையில்,
அவர்களது குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 3 பேருக்கு இதுபோல் ஏற்கனவே குழந்தைகள் பிறந்துள்ளன. மூளை வளர்ச்சி அடையாமல் தலைக்கு வெளிப்பகுதியில் உள்ளது. பரம்பரை குறைபாடு காரணமாக இதுபோன்ற குழந்தைகள் பிறக்கின்றன என்றனர்.
தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மனோகரன் தெரிவித்துள்ளார்.