சிமிண்ட் கலவை இயந்திரம் திருடிய தேமுதிக நிர்வாகி கைது
சாத்தான்குளம்: சிமிண்ட் கலவை இயந்திரத்தை திருடியதாக சாத்தான்குளம் தேமுதிக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பிரமணியாபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான சிமிண்ட் கலவை இயந்திரத்தை கடந்த 15ம் தேதி தச்சமொழி மெயின்ரோட்டில் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் அது திருடு போனது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பிரவின்குமார், ஏட்டு கணேசன் ஆகியோர் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு மினி வேனில் சிமிண்ட் கலவை இயந்திரத்தை ஏற்றி செல்வதை பார்த்தனர். வேனை நிறுத்தி விசாரித்தபோது கலவை இயந்திரத்தை திருடி செல்வது தெரியவந்தது.
இது தொடர்பாக இட்டமொழி ரோட்டை சேர்ந்த பெரிய பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தேமுதிக நகர இளைஞரணி செயலாளராக உள்ளார். இவரது தம்பியும் தேமுதிக நகர இளைஞரணி துணை செயலாளருமான சந்திரபாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications