பாரம்பரிய நகராக வேலூரை அறிவிக்க பரிசீலனை - அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் நகரை பாரம்பரிய நகரமாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மாநில செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.
வேலூரில் நடந்த அரசு பொருட்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பரிதி பேசுகையில், வேலூர் நகரை பாரம்பரிய நகராக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
அவ்வாறு அறிவிக்கப்பட்டவுடன், வேலூர் நகரை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications