ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் மாநாடு - திருமாவளவன்
ஈரோடு: ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஜனவரி 25ம் தேதி சென்னையில் மாநாடு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நம்பியூரைச் சேர்ந்த மாரியப்பனின் மகள் காதுகுத்து விழாவுக்கு திருமண மண்டபம் கேட்ட போது அந்த ஊர் பிரமுகர்கள் சிலர் தர மறுத்து விட்டனர்.
இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கோவணம் கட்டி ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் இப்பிரச்சனை குறித்து விசாரணை நடத்த வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நம்பியூர் சென்று இது குறித்து விவரம் கேட்டு அறிந்தார். பின்பு அவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் உயசந்திரனை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், தலித் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டும் இது அரசின் கடமை. நம்பியூர் பகுதியில் தலித் மக்களுக்கு என தனி திருமண மண்டபம் கட்ட வேண்டும். ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உடனே வீட்டு மனை வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது, நம்பியூர் தலித் மக்களின் உரிமைகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். இது அரசின் கடமை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கோபியில் விடுதலை சிறுத்தைகள், பெரியார் திக, தலித் மக்கள் கட்சி போன்ற 12 அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்பாட்டம் நடத்த உள்ளோம்.
மேலும், ஈழத் தமிழர்களை சிங்கள அரசு கொன்று குவித்து வருகின்றது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. இது பற்றி பேசினால் விமர்சனம் எழுகின்றது. இது மக்களின் கருத்துரிமையை பாதிக்கும் செயல். இது பற்றி விளக்கிக் கூறும் மாநாடு ஜனவரி 25ம் தேதியன்று சென்னையில் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications