இளம்பெண் எரித்துக் கொலை-கணவரை போலீஸ் தேடுகிறது
தர்மபுரி: தர்மபுரி அருகே இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது கணவரை போலீஸ் தேடுகிறது.
தர்மபுரி மாவட்டம், குமாரசாமி பேட்டையைச் சேர்ந்த முரளி-பிரேமா தம்பதிக்கு 9 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது.
ஆனால், பல பெண்களுடன் முரளி கள்ள தொடர்பு வைத்திருந்தார். இந்த விஷயம் அவரது மனைவி பிரேமாவுக்கு தெரிய வந்தபோது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று பிரேமா தனது வீட்டில் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரேமா உயிரிழப்புக்கு காரணம் முரளி தான் காரணம் என தெரிய வந்தது. இந்நிலையில் முரளி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications