சேலம் கலெக்டர் அலுவலம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்கள்!
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலம் முன் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் அருகேயுள்ள கோவிந்த கவுண்டனூர் தோட்டம் காட்டுவளவு மற்றும் பாவேந்தர் தெரு ஆகியப் பகுதிகளை சேர்ந்த 500 ஆதி திராவிட குடும்பங்களுக்கு வீட்டுமனை கொடுக்க நாகமலை அடிவாரம் பகுதியில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. ஆனால் வீட்டு மனை இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும் அதிகாரிகள் நிலம் வாங்கிய நபர்களிடமே அந்த நிலத்தை ஒப்படைக்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதை தடுத்து நிறுத்த சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 20 பெண்கள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து உதவி ஆட்சியர் அலுவலகம் முன்னர் தீக்குளிக்க முயன்றனர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்து போலீசார் விரைந்து சென்று அந்த பெண்களை தடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
நிலம் ஆர்ஜிதம் பிரச்சனையை போலீசாரிடம் அவர்கள் கூறியதையடுத்து மாவட்ட கலெக்டர் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications