For Daily Alerts
Just In
துருக்கி, அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்
அங்காரா&வாஷிங்டன்: துருக்கி நாட்டிலும், அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி தலைநகர் அங்காராவில் அந் நாட்டு நேரப்படி நள்ளிரவு 1.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 புள்ளிகளாகப் பதிவானது. இதையடுத்து வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
அலாஸ்காவில்..
அதே போல கனடாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க மாகாணமான அலாஸ்காவில் அதிகாலை 3.35 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
பனி மலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோளில் 6.5 புள்ளிகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் இல்லை
Comments
Story first published: Thursday, December 27, 2007, 10:44 [IST]