ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் உடைப்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலின் நுழைவு வாயிலில் இருந்த இரு உண்டியல்களை ஐயப்ப பக்தர்கள் தவறுதலாக உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல பூஜையில் கலந்து விட்டு, பக்தர்கள் ராமேஸ்வரம், மதுரை ஆகிய இடங்களில் உளள கோவில்களுக்கு செல்வது வழக்கம்.

அதே போல் இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஐயப்ப பக்தர்கள், நெருக்கடி அதிகமாக இருந்ததால் 1 மணி நேரம் கோவில் கதவை மூட சொல்லி சத்தம் போட்டனர். அப்போது அவர்கள் கோவில் நுழைவு வாயிலில் இருந்த இரண்டு உண்டியல்களை எதிர்பாரதவிதமாக உடைத்து விட்டனர்.

இதனால் உண்டியல்களில் இருந்த பணம், காசு உள்ளிட்டவை சிதறி கீழே விழுந்தன. இதையடுத்து அவற்றை சிலர் எடுக்கத் தொடங்கினர். இதையடுத்து கோவில் மூடப்பட்டது.

கோவில் அதிகாரிகள் விைரந்து சென்று உண்டியலிலிருந்து கீழே விழுந்த பணத்தையும், நாணயங்களையும் பத்திரமாக மீட்டனர்.

இதற்கிடையே, கோவிலை அதிகாரிகள் மூடியதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. கோவிலில் கூட்டம் அதிகம் இருப்பதால் மாற்று ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருக்க வேண்டும் என இந்து முன்னணி கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+