For Daily Alerts
Just In
பாக். பதட்டம் - ரயில்கள் ரத்து
டெல்லி: பாகிஸ்தானில் பெனாசிர் படுகொலையைத் தொடரர்ந்து பெரும் பதட்டம் நிலவி வருவதால், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இயக்கப்படும் சம்ஜாதா மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டதால் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
எனவே பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்ஜாதா எக்ஸ்பிரஸ் மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை டெல்லி - லாகூர் இடையிலான பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை.
Comments
Story first published: Saturday, December 29, 2007, 11:48 [IST]