நெல்லையில் மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் போட்டி
நெல்லை: நெல்லையில் 4 மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கம்ப்யூட்டர் போட்டிகள் ஜனவரி 18, 19ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டானில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைய உள்ளது. இந்த பூங்கா அமைவதற்காக நெல்லையில் உள்ள இயற்கை வளங்கள், முக்கிய நிறுவனங்கள், வசதிகள் குறித்து குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்ப பூங்கா குறித்து மாணவ, மாணவிகளிடம் விளக்குவதற்காக 4 மாவட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கும் மெகா கம்ப்யூட்டர் போட்டிகளுக்கு எம்பவர் ஐ.டி எல்காட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தினருடன் எல்காட் நிர்வாக இயக்குனர் உமாசங்கர் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் பேசியதாவது,
நெல்லையில் ஜனவரி 18, 19 ஆகிய 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கம்ப்யூட்டர் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்படடுள்ளது.
இந்த 2 நாட்களும் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 18ம் தேதி பாளை தூய சவேரியர் கல்லூரியிலும், 19ம் தேதி தீதகற்நல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த போட்டிகளின் நடுவர்களாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் செயல்படுவர். இதற்காக விப்ரோ, சத்யம் கம்ப்யூட்டர், டிசிஎஸ், எச்.சி.எல் உள்பட 18 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் நெல்லை வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications