மன்மோகன் இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்து தி.க. ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil


சென்னை: இலங்கை சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லக் கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.க. தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையின் சுதந்திர தின விழா ஜனவரி 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிகிறது. இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.

தமிழர்களுக்கு எதிராக இனப் போரை ஏவி விட்டுள்ளது இலங்கை அரசு. அப்படிப்பட்ட அரசு நடத்தும் விழாவில் பங்கேற்பது என்பது தமிழர்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தும். எனவே இந்த விழாவில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று அவருக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.

பிரதமரோ அல்லது அவரது சார்பிலோ யாரும் இலங்கை சுதந்திர தின விழாவில் பங்கேற்கக் கூடாது.

தமிழர்கள் 2ம் தர குடிமக்களாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த எந்த உயர் மட்டத் தலைவரும், அதிகாரியும் இலங்கை சுதந்திர தின விழாவில் பங்கேற்கக் கூடாது.

முதல்வர் கருணாநிதியும், பிரதமரிடம் எடுத்துச் சொல்லி அவரது பயணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பிரதமர் இலங்கைக்கு செல்லக் கூடாது.

2005ம் ஆண்டு ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாகியுள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் கூட கிடைக்காத அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லக் கூடாது என்பதை வலியுறுத்தி 31ம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் வீரமணி.

திருமாவளவன் வேண்டுகோள்:

ஈழத்தமிழர்களை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஈவு, இரக்கமில்லாமல் கொன்று குவித்து வரும் சிங்கள ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருவதுடன் அந்த ராணுவம் நடத்துகின்ற விழாவில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

அவ்வாறு அவர் விழாவில் கலந்து கொண்டால் இத்தனை காலமும் சிங்கள ராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது சரிதான் என நியாயப்படுத்துவதாகவும், ஊக்கப்படுத்துவதாகவும் அமையும். அத்துடன் தமிழகத்தின் தமிழர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு பொருட்படுத்தாமல் கொச்சைப்படுத்துவதாகவும் அமையும்.

எனவே அந்த விழாவில் பிரதமர் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மத்திய அரசை வற்புறுத்தி பிரதமர் இலங்கை செல்வதை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 31ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்கிறோம் என்றார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+