பெண் ஹஜ் பயணி விமானத்தில் மரணம்
Subscribe to Oneindia Tamil
கொச்சி: ஹஜ் பயணம் செய்து விட்டுத் திரும்பிய பெண் விமானத்திலேயே மரணமடைந்தார்.
கேரளா, திருச்சூர் மாவட்டம், கொடுங்கநல்லூரை சேர்ந்தவர் அலீமா சைநூதீன் (76). இவர் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டு, ஏர் இந்தியா விமானம் மூலம் ஜெட்டாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அலீமாவுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. விமானத்தில் இருந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லாமல், அலீமா விமானத்திலேயே இறந்து போனார்.
300 ஹஜ் யாத்ரீகர்களுடன் வந்த அந்த விமானம் இரவு 8-10 மணிக்கு தரையிறங்கிய போது, அலீமாவின் உறவினர்களிடம் அவரது சடலம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications