பாமகவின் மாபெரும் மரம் நடு விழா

Subscribe to Oneindia Tamil


திருச்சி: தமிழகத்தில் அடுத்த மாதம் மாபெரும் மரம் நடும் நிகழ்ச்சியை நடத்த பாமக இளைஞர் அணி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பாமக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் டி.அருள்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 10 ஆயிரம் பாமக இளைஞர் அணியினர் இந்த மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

மரம் நடு விழாவின் நிறைவாக ஜனவரி கடைசி வாரத்தில் சென்னையில் மாபெரும் பேரணியும் நடத்தப்படும்.

பேரணியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார்.

திமுக அரசின் குறைபாடுகளை சுட்டிக் காட்ட நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். தவறுகளை தவறு என்று சொல்ல நாங்கள் தயங்கவும் மாட்டோம்.

கர்ப்பிணி மகளிருக்கு மாதந்தோறும் அரசால் வழங்கப்படும் ரூ.1000 நிதியுதவி முறையாக வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி உரிய கவனம் செலுத்தி குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+