கொழும்பில் குண்டுவெடிப்பு: 4 ராணுவத்தினர் பலி - 20 பேர் காயம்
கொழும்பு: கொழும்பு நகரில் இன்று காலை நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நான்கு ராணுவ வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கொழும்பு நகரில் புத்தாண்டான நேற்று காலை ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் எம்.பியான மகேஷ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார், சிவன் கோவிலில் நடந்த இந்த படுகொலையால் இலங்கையில் பரபரப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில் இன்று காலை கொழும்பில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இம்பால் ஹோட்டல் அருகே வந்த ராணுவ வாகனத்தைக் குறி வைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ராணுவ வாகனம் வந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் அதில் இருந்த 4 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் கொழும்பில் பதட்டம் அதிகரித்துள்ளது. அனைத்துப் பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications