அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சேலம்: தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் பூலாவாரியில் உள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறி விட்டு தொலைபேசி இணைப்பை கட் செய்து விட்டார்.
இதனால் உஷாரான போலீசார் வெடிகுண்டு தடுப்பு மற்றும் மோப்ப நாய் புரிவு போலீசாருடன் பூலாவாரியில் உள்ள தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
ஆனால் அங்கு வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. விசாரணையில் குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் சேலம் வணிக வளாகத்தில் உள்ள பொது தொலைபேசியில் இருந்து பேசியிருப்பது தெரியவந்தது.
போனில் பேசிய மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications