உயர் அதிகாரியை ஆபாசமாக திட்டிய ஏட்டு கைது
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தில், உயர் அதிகாரியை, குடிபோதையில் போனில் கூப்பிட்டு ஆபாசமாக திட்டிய தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
ஜெகதாப்பட்டனம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் கனகராஜ். இவர் ஜனவரி 1ம் தேதியன்று புதுக்கோட்டை சிறப்புப் பிரிவு அதிகாரியை போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசித் திட்டியுள்ளார்.
புத்தாண்டும், அதுவுமாக ஆபாச திட்டு வந்ததால் அந்த அதிகாரி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கனகராஜை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications