தூத்துக்குடி- ஒரே ஆண்டில் 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட எஸ்பி தீபக் தமோர் கூறினார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் களவு போன பொருட்கள் தொடர்பான வழக்குகள் 578 பதிவாகியுள்ளது. இதில் 473 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 62 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 123 கஞ்சா வழக்குகள் பதிவாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்ற வழக்குகள் 218 பதிவாகியுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 2816 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications