ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டடத் திறப்பு விழா
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை துபாய் ஈடிஏ அஸ்கான் டிரேடிங்&ஷிப்பிங் பிரிவின் தலைமை செயல் இயக்குனரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான நூருல் ஹக் திறந்து வைத்தார். இந்த கட்டடத்தை தனது தந்தை எம்.ஏ.எம்.ஏ. அப்துல் கரீம் நினைவாக கல்லூரிக்கு அர்ப்பணித்தார்.
ஈடிஏ நிறுவனத்தின் மேலாளர் ஹமீத் கான் மற்றும் ஷபியுத்தீன் ஆகிய முன்னாள் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் ஷேக் முஹம்மது, துணை முதல்வர் முனைவர் எம்.எம்.சாகுல் ஹமீது, பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications