For Daily Alerts
Just In
அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத்
கோவை: முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் கோவை நீதி மன்றத்தில் மதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆஜரானார்.
கோவை மாவட்டம், காரனோடை அருகே மருதூரில் கடந்த 25.6.2006 அன்று மதிமுக 13 ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் மதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று (ஜனவரி 3) நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி முன்பு மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆஜரானார். பின்னர் வழக்கை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதி சொக்கலிங்கம் உத்திரவிட்டார்.
Comments
Story first published: Friday, January 4, 2008, 14:36 [IST]