அதிபர் தேர்தல்-அயோவா வாக்கெடுப்பில் ஹில்லாரி தோல்வி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் மாகாண வாக்கெடுப்பில் ஹில்லாரி கிளிண்டன் முதல் சுற்றில் தோல்வி அடைந்துள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவரான ஓபாமாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பிலும், குடியரசுக் கட்சி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு அனைத்து மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதில் அதிக வெற்றிகளை யார் பெறுகிறார்களோ அவர்களே அந்தந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அதாவது மக்கள் செல்வாக்கு உள்ளவர்களுக்கே வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த மாகாண வாக்கெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது. முதலில் அயோவா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹில்லாரி கிளிண்டன், கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாரக் ஓபாமா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இதில் 36 சதவீத வாக்குகளைப் பெற்று ஓபாமா வெற்றி பெற்றார். ஹில்லாரிக்கு 3வது இடமே கிடைத்தது.
குடியரசுக் கட்சி சார்பில் ஆர்கன்சாஸ் மாகாணா முன்னாள் ஆளுநர் மைக் ஹக்கபி வெற்றி பெற்றார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ஹில்லாரிக்கு முதல் சுற்றிலேயே தோல்வி கிடைத்துள்ளது அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தத் தோல்வியால் ஹில்லாரியை ஜனநாயகக் கட்சி புறக்கணிக்கும் என்பதில்லை. முன்பு மாகாண அளவில் தோற்ற பில் கிளின்டனைத் தான் தேர்தலில் நிறுத்தி அந்தக் கட்சி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications