தமிழக கட்சிகள் எதிர்ப்பு: பிரதமரின் இலங்கை பயணம் ரத்து
டெல்லி: தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பு வந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் 50வது ஆண்டு சுதந்திர தின விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இலங்கை அழைப்பு விடுத்திருந்தது. இதை பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் தமிழர்கள் மீது இலங்கை படைகள் பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ள நிலையில், அதற்கு அமெரிக்கா, ஐ.நா. சபை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என்று கருத்து எழுந்தது.
மதிமுக, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட தமிழக கட்சிகளும் பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என்று கோரிக்கை விடுத்தன.
இந்தப் பின்னணியில் தற்போது பிரதமரின் இலங்கை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட தினத்தில் பிரதமருக்கு தொடர் அலுவல்கள் இருப்பதால் இலங்கை பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதால் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications