மருத்துவமனையிலிருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்
டெல்லி: உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1ம் தேதி) மூச்சுத் திணறலும், நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 6 நாட்களாக சோனியாவுக்கு தீவிர சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவரை நீண்ட நேரம் பேசக்கூடாது எனவும், அதிக ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தனர்.
இதனால் மருத்துவமனையில் இருக்கும்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை சோனியா.
இந்த நிலையில் உடல் நலம் தேறியைதத் தொடர்ந்து சோனியா காந்தி இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் நல்ல ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சோனியா காந்தியின் உடல் நிலை குறித்து மருத்துவனமை நிர்வாக குழு தலைவர் டாக்டர் பி.கே.ராவ் வெளியிட்ட அறிக்கையில், சோனியா காந்தியின் உடல் நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது. அவர் நல்ல ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications