மு.க.அழகிரி பிறந்த நாள்: 5000 பேருக்கு நல உதவிகள் வழங்க திட்டம்
மதுரை: மு.க.அழகிரியின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு 5,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மதுரை மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பாலராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. கோ.தளபதி, பொருளாளர் கண்ணன், துணைச் செயலாளர் அயூப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், ஜனவரி 30ம் தேதி மு.க.அழகிரியின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு 5,000 ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
அழகிரியின் பிறந்த நாள் விழாவை மாநாடு போல வெகு விமரிசையாக நடத்த வேண்டும்.
பொங்கல் திருநாளில் மதுரையில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, கிளைக் கழகங்களில் திமுக கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அழகிரியின் பிறந்த நாளையொட்டி நகரெங்கும் கட் அவுட்கள், பேனர்கள் வைக்கும் பணியில் அழகிரி ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.