For Quick Alerts
For Daily Alerts
Just In
மீனம்பாக்கம் அரசுப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னையில் அரசு பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மீனம்பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் மோப்பநாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் அப்பள்ளிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என தெரிய வந்தது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைபேசி அழைப்பு அப்பகுதியில் உள்ள பலசரக்குக் கடையில் உள்ள பொது தொலைபேசியில் இருந்து வந்ததை அறிந்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Monday, January 7, 2008, 14:52 [IST]